கல்பாக்கம் அருகே வயலில் கிடந்த பண்டைய தங்க காசுகள்

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குடிபேரம்பாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் நாயக்கருக்கு சொந்தமான நிலத்தை உழுதனர்.
உழுது முடித்து ஆட்கள் சென்ற பின் தங்கராஜ் என்பவர் அந்த வயலுக்குச் சென்றார். அப்போது அங்கு தங்கக் காசுகள் சிதறிக் கிடந்தன.
அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்ற தங்கராஜ், தந்தை வாசுதேவனிடம் கொடுத்தார். இந்த விஷயம் அப்பகுதியில் வேகமாக பரவியது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வயலில் குவிந்து பலரும் தங்க காசுகளை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸாரும், திருக்கழுக்குன்றம் தாசில்தார் கண்ணம்மாளும் வருவாய் துறை அதிகாரிகளுடன் குடிபேரம்பாக்கத்துக்கு விரைந்தனர்.
வாசுதேவனிடம் இருந்து 5 தங்க காசுகள் கைப்பற்றப்பட்டு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த காசுகள் ஒவ்வொன்றும் சுமார் கால் பவுன் எடையுடன் இருந்தன.
அநதக் காசுகளில் நாமம் வடிவ கோடுகள் உள்ளன. அவை புராதன தங்க நாணயங்கள் எனத் தெரியவந்துள்ளது. வேறு யார் யார் தங்க காசுகளை எடுத்து சென்றனர்என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications