பீம்சென் ஜோஷிக்கு பாரத ரத்னா!

கிட்டத்தட்ட 7 ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2001ம் ஆண்டில் செனாய் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கானுக்கும், பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்காருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
இப்போது ஜோஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 86 வயதான ஜோஷி ஏற்கனவே பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வென்றவர்.
கர்நாடக மாநிலம் காடக் நகரில் பிறந்தவரான பீம்சென் ஜோஷி கிரண கரானா இசைக் கலைஞர்களின் வழித் தோன்றாலாவார். அந்த இசையில் பல புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியவர்.
கிரண கரானை இசைப் பள்ளியை உருவாக்கிய அப்துல் வகீத் கானின் சிஷ்யரான அப்துல் கரீம் கானிடம் பயின்ற சவாய் கரானாவிடம் பயிற்சி பெற்றவர் பீம்சென் ஜோஷி.
தனது இளம் வயதிலேயே இசை பயில குருவைத் தேடி வீட்டு விட்டுக் கிளம்பியர் ஜோஷி. பீஜப்பூர், புனே, குவாலியர் என சுற்றித் திருந்து கடைசியில் தனது குருவை தேர்ந்தெடுத்து இசை பயின்றனர்.
19 வயதில் அவரது முதல் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. 20 வயதில் முதல் ஆல்பத்தை வெளியிட்டவர். இவரது மகன் ஸ்ரீனிவாசும் வாய்ப் பாட்டு இசைக் கலைஞர் தான்.












Click it and Unblock the Notifications