நுண்கலை மாணவர்களுக்கு கோட்டா வழங்க சுதாராணி ரகுபதி கோரிக்கை

திருச்சி நர்த்தனா நுண்கலை அகாடமியில் நடந்த மாணவர் சந்தி்ப்பில் சுதாராணி ரகுபதி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நுண்கலை படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
இதன் மூலம் பாரம்பரிய நுண கலைகளைப் படிக்க இளைஞர்களும், இளம் பெண்களும் முன்வருவார்கள். இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை காக்க அவர்களுக்கு இது உந்துதலாக இருக்கும்.
நுண்கலை படித்தால் வேலை கிடைப்பதில் உத்தரவாதம் இல்லை என்ற நிலை காரணமாக கலைப் பாடப் பிரிவுகளுக்கு மாணவ, மாணவியர் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
மாறாக, நுண்கலை மாணவ, மாணவியருக்கு தனி இட ஒதுக்கீடு இருந்தால் நிச்சயம் இந்தப் படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்குத் தரப்படுவதைப் போல வேலை வாய்ப்பில் நுண்கலை மாணவ, மாணவியருக்கும் இட ஒதுக்கீடு வழங்கலாம்.
பாரம்பரிய நடனம், இசை, வாய்ப்பாட்டு உள்ளிட்டவற்றை கற்க சிறார்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் நுண்கலை கிளப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
இவற்றை கற்போருக்கு 25 மதிப்பெண் வரை தந்து அவர்களை ஊக்குவிக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications