துபாய்-தமிழக முன்னாள் மாணவர் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் (சதாவதானி ஷெய்குத் தம்பிப் பாவலர் மேனிலைப் பள்ளி) படித்து உலகின் பல பாகங்களிலும் வாழும் முன்னாள் மாணவர்கள் இணைந்து APSA ( Association of Pavalar School Alumni) எனும் பெயரில் பள்ளியின் வளர்ச்சிக்காக ஓர் அமைப்பை நிறுவியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் APSA உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 21ம் தேதி துபாய் தெய்ராப் பகுதியில் அமைந்துள்ள ASCON D BLOCK இல் நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு அரிய ஆலோசனைகளை வழங்கினர். தேவைப்படும் நிதியினை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications