வட மொழிப் பெயர் மோகம்!
தமிழகத்தில் வடமொழிப் பெயர்கள் வைப்பது அதிகரித்துள்ளது. இங்குதான் இந்த நிலை, மற்ற மொழிகளில் இப்படி இல்லை. தமிழ் இயக்கங்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்று விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் கேட்டுக் கொண்டார்.
வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை, வேலூர் திருக்குறள் இயக்கம் ஆகியவை இணைந்து 'உலக மயமாக்கலால் ஏற்படும் பாதிப்புகள்' குறித்த கருத்தரங்கம், நாடகம், விருது வழங்கல், திருக்குறள் சொல்லரங்கம் ஒருங்கிணைந்த விழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
வேலூர் அண்ணா கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் விஸ்வநாதன் பேசியதாவது:
தமிழகத்தில் இன்றைக்கு பெரும்பாலும் வடமொழிப் பெயர்களைச் சூடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் பிற தென்னிந்திய மொழிகளில் கூட இந்த நிலையில்லை. இது மிகவும் ஆபத்தான போக்கு. நமது அடையாளத்தை இழக்கக் காரணமாக அமைந்துவிடும்.
திருக்குறளில் இல்லாத கருத்துக்களே இல்லை. எல்லோரும் உண்மை பேசுவது என்று முடிவெடுத்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
தமிழ் உணர்வு இருப்பதால்தான், இலங்கையில் தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்கும் போது நம்மால் கண்ணீர் விடவும், ஆதரவுக் குரல் கொடுக்கவும் முடிகிறது என்றார்.
காலையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சி. கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
செயலர் இரா.ப. ஞானவேலு வரவேற்றார். இதில் மாநில தலைவர் த. வெள்ளையன், மக்களவை உறுப்பினர் பி. மோகன், சிபிஎம் மாவட்ட செயலர் ஏ. நாராயணன் உள்ளிட்டோர் பேசினர்.
பிற்பகல் விருது வழங்கும் விழாவை வேந்தர் ஜி. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். த. வெள்ளையனுக்கு திருவள்ளுவர் விருதும், சி. கிருஷ்ணனுக்கு கி.ஆ.பெ. விஸ்வநாதன் விருதும் கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளால் வழங்கப்பட்டது.
திருவள்ளுவர் காலத்து அரசியலும், நிகழ்கால அரசியலும் என்ற தலைப்பில் பேராசிரியர் பெரியார்தாசன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிகளை கவிஞர் ச.இலக்குமிபதி தொகுத்து வழங்கினார். திருக்குறள் இயக்கச் செயலாளர் ச. இளவழகன் நன்றி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications