பள்ளி குழந்தைகளுக்கு கடிதம் எழுதும் போட்டி

Subscribe to Oneindia Tamil

அஞ்சல் துறை சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான கடிதம் எழுதும் போட்டி ஜனவரி 4ம் தேதி நடைபெறுகிறது.

இப் போட்டியில், கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

"சிறந்த பணி சூழல் வாழ்வை எவ்வாறு மேம்படுத்தும்' என்ற தலைப்பில் மாணவர்கள் ஆங்கிலம் அல்லது தமிழில் கடிதம் எழுத வேண்டும். தேசிய அளவில் மூன்று படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகளும், சான்றிதழும் அளிக்கப்படும். முதல் பரிசை வெல்லும் படைப்பு, அதிகாரப் பூர்வ இந்திய படைப்பாக சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இப் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பபடிவங்கள் அஞ்சலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் முதுநிலைக் கண்காணிப்பாளர் சார்பில் கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த விண்ணப்பம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வயது குறித்த சான்று, தலைமை ஆசிரியர் கையெழுத்துடன் கூடிய 3 பாஸ்போர்ட் புகைப் படங்களை இணைத்து வரும் 20ம் தேதிக்குள் அஞ்சல் துறை முதுநிலைக் கண்காணிப்பாளர், கோவை கோட்டம், கோவை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+