ஈரோடு: சரித்திர நாவல் வெளியீட்டு விழா
ஈரோடு: எழுத்தாளர் இடைப்பாடி அமுதனின் 'எழுகரை சூரிய காங்கேயன்' என்ற சரித்திர நாவல் வெளியீட்டு விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் இன்று நடக்கிறது.
பேராசிரியர் இராம.குருநாதன் தலைமை வகிக்கிறார். இடைப்பாடி நகர்மன்றத் தலைவர் மா.இருசப்பமேத்தா, பிஎஸ்என்எல் ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் வி.சுந்தர் முன்னிலை வகிக்கின்றனர். புலவர் செ.ராசு நூலை வெளியிடுகிறார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் பேசுகிறார்.
மோரூர் நல்லபுள்ளியம்மன் திருக்கோயில் அறங்காவலர் ந.கந்தசாமி, பிஎஸ்என்எல் முன்னாள் அதிகாரி இரா.கிருஷ்ணசுவாமி, தொழிலதிபர் கூ.அரங்கநாதன், ஆசிரியர் தி.செ.பழனிவேலு, எழுத்தாளர் கெÜதம நீலாம்பரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இடைப்பாடி சரஸ்வதி வித்யாலயா பள்ளித் தாளாளர் அ.மாசிலாமணி நன்றி கூறுகிறார். 'சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்' என்ற நூல் அறிமுகப்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications