மாமல்லபுரத்தில் நாட்டிய விழா

சுற்றுலா அமைச்சர் சுரேஷ்ராஜன் முரசு கொட்டி இதனைத் தொடங்கி வைத்தார். நேற்று தொடங்கிய இந்த விழா அடுத்த மாதம் 25ம் தேதி வரை நடைபெறும்.
விழாவை தொடங்கி வைத்து சுரேஷ் ராஜன் பேசுகையில்,
தமிழக அரசின் சுற்றுலாத்துறை, மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து கடந்த 1992ம் ஆண்டு முதல் மாமல்லபுரத்தில் நாட்டிய விழாவை நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு குஜராத், ஒரிஸ்ஸா, சிக்கிம், மிசோராம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனங்களான பரத நாட்டியம், கிராமிய நடனங்கள், கலை நிகழ்ச்சி போன்றவையும் இடம்பெறுகின்றன.
கடந்த ஆண்டு இந்த நாட்டிய விழாவை 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
சுற்றுலா தலங்களின் கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.86 கோடி செலவிடப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் மட்டும் ரூ.8 கோடி செலவிலான பணிகள் நடைபெற்றுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications