2008ன் முக்கிய சம்பவங்கள்!

2008ம் ஆண்டின் முடிவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஈராக்கில் கொடுக்கப்பட்ட மரியாதையைப் பார்த்து உலகமே அரண்டு போனது.
பதவிக் காலத்தை முடிக்கும் புஷ், அதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் செல்ல விரும்பினார். அதன்படி டிசம்பர் 15ம் தேதி பாக்தாத்துக்கும் சென்றார்.
பாக்தாத் அதிபர் அப்பாஸை சந்தித்த புஷ், அவருடன் இணைந்து செய்தியாளர்களையும் சந்தித்தார். அங்குதான் புஷ்ஷுக்கு அவமரியாதை நேர்ந்தது.
நிருபர்களுடன் அமர்ந்திருந்த ஈராக் டிவி நிருபர் முன்டாசர் அல் ஜெய்தி, தனது ஷூக்களை எடுத்து ஆவேசமாக கத்தியபடி புஷ் மீது எறிய, படு லாவகமாக குனிந்து ஷூ வீச்சிலிருந்து தப்பினார் புஷ்.
அமெரிக்கா உள்பட உலகமே இதைப் பார்த்து அதிர்ந்து போனது. ஆனால் ஷூவை வீசிய முன்டாசரோ, அரபு நாடுகளின் நாயகனாகி விட்டார்.
அவருக்கு உலகின் பல்வேறு முஸ்லீம் நாடுகளிலிருந்தும் பரிசுகள் குவிந்தன. லிபிய அதிபர் கடாபியின் மகள், முன்டாசரை மாவீரன் என்று புகழ்ந்தார்.
முன்டாசர் வீசிய ஷூவைத் தயாரித்த எகிப்து நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் அதே டைப் ஷூக்களைக் கேட்டு ஆர்டர்கள் குவி்ந்தன. முன்டாசரின் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் ஷூக்களை இலவசமாக சப்ளை செய்வதாக பல நிறுவனங்கள் அறிவித்தன.
பதவியிலிருந்து விலகும் நேரத்தில் கிடைத்த இந்த வரவேற்பை நிச்சயம் புஷ் தனது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications