மகாத்மா எழுத்துக்களின் 4வது பாகம் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மகாத்மா காந்தி எழுதிய நூல்களின் 4வது தொகுப்பு திருச்சியில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன.
மகாத்மா காந்தி எழுதிய நூல்களை தமிழ்ப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது அவரது மொத்த நூல்களின் 4வது தொகுப்பு திருச்சியில் வெளியிடப்பட்டது.
ராமானந்த அடிகளார் அறக்கட்டளை இந்த தொகுப்பை வெளியிட்டுள்ளது. 20 பகுதிளைக் கொண்ட இந்தத் தொகுப்பு 20 ஆயிரம் பக்கங்களைக் கொண்டதாக உள்ளது.
காந்தியடிகள் எழுதிய கடிதங்கள், அவரது வாழ்க்கை சரிதம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. இந்த்த தொகுப்பை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.
முதல் பிரதியை திருச்சி மேயர் சாருபாலா தொண்டமான் பெற்றுக் கொண்டார். இந்தத் தொகுப்பின் விலை ரூ. 3000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications