தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு என்எஸ்எஸ் விருது
Subscribe to Oneindia Tamil
தமிழகத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர், மாணவர் உள்பட 29 பேருக்கு இந்திரா காந்தி என்.எஸ்.எஸ். விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
13வது தேசிய இளைஞர் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கினார்.
இதில் ஆளுநர் பர்னாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அளவில் சாதனை படைத்த என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கும், என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரிகளுக்கும் இந்திரா காந்தி விருதுகளை வழங்கினார்.
தமிழகத்தின் மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரி எம்.சாலமோன் பெர்னார்ட் ஷா மற்றும் ஈரோடு கோபி கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர் எம்.வினோத்குமார் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 29 பேருக்கு ஆளுநர் விருதுகளை வழஙகினார்.












Click it and Unblock the Notifications