For Daily Alerts
Just In
துபாயில் குடியரசு தின சிறப்பு இந்தி கவியரங்கம்
துபாய்: துபாயில் இந்தியாவின் 59 ஆவது இந்திய குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 23ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு இந்தி மொழி கவியரங்கம் இந்திய உயர்நிலைப்பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கவியரங்கில் முதன்மை விருந்தினராக அமீரகத்துக்கான இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மது கலந்து கொள்கிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்கள் பிரதீப் சௌபே, ஓம்பிரகாஷ் ஆதித்யா, அஸ்கரன் அதல், அருண் ஜெமிணி, ஓம் வியாஸ், மன்ஸித் சிங் உள்ளிட்டோர் கவி பாட இருக்கின்றனர்.
மேலும் விபரம் பெற பரத்பாய் ஷா 04 2691512 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Comments
Story first published: Friday, January 23, 2009, 9:42 [IST]