மாதா அமிர்தானந்தமாயி இன்று நாகர்கோவில் வருகை
நாகர்கோவில்: மாதா அமிர்தானந்தமாயி இன்று நாகர்கோவில் வருகிறார்.
இது குறித்து அவரது சீடர் சங்கர சைதன்யா கூறுகையில்,
மாதா அமிர்தானந்தமாயி மடத்தின் சார்பில் கேரளாவில் 600க்கும் மேற்பட்ட ஆனாதை குழந்தைகளுக்கு விடுதி வசதி, ஏழைகளுக்கு இலவச வீடுகள், திருவனந்தபுரத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் காப்பகம் என பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும் உதவிகளை செய்யப்பட்டு வருகிறது.
மாதா அமிர்தானந்தமாயி அவர்களின் பணிகளை பாராட்டி மகாவீரர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
உலக நாடுகளுக்கு சென்று ஆன்மீக பணியில் ஈடுபடும் மாதா இன்று கன்னியாகுமரி பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் உள்ள அமிர்தானந்தமாயி மடத்திற்கு வருகிறார்.
மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை சொற்பொழிவு, பஜனை, தியானம், ஆசி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாதாவின் ஆசி பெற உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு இரவு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதுதவிர பக்தர்களுக்காக கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications