வீரமணிக்கு கலைஞர் விருது - நடிகர் தியாகுவுக்கு மாறன் விருது
முரசொலி அறக்கட்டளை கடந்த 1996ம் ஆண்டு முத்ல தமிழ் இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து கலைஞர் விருது வழங்குகிறது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் மாறன் சிறப்பு விருது ஒன்றையும் வழங்கி வருகிறது. இதற்கான பொறுப்புகளை முரசொலி அறக்கட்டளை ஏற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுடன், 1 லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்படும்.
இதுகுறித்து முரசொலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஆண்டுக்கான கலைஞர் விருது தி.க. தலைவர் கி.வீரமணி, புகைப்பட நிபுணர் யோகா, எழுத்தாளர் சோலை ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. முரசொலி மாறன் சிறப்பு விருது நடிகர் தியாகுவிற்கு வழங்கப்படும்.
இதற்கான விழா வரும் 25ம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை கலைஞர் அரங்கில் நடக்கிறது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். திமுக பொதுச் செயலர் அன்பழகன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார் என கூறியுள்ளது முரசொலி அறக்கட்டளை.