சிங்கப்பூர்: ஊற்றுக்கண்- வெப்பமூச்சுகள் நூல்கள் வெளியீடு
சிங்கப்பூரில் டாக்டர் ஹிமானா சையத் அவர்களின் ஊற்றுக்கண், வெப்பமூச்சுகள் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா வரும் மார்ச் 1ம் தேதி நடக்கிறது.
பிற்பகல் மூன்று மணிக்கு சிங்கப்பூர் மஸ்ஜித் பென்கூலன் பன்னோக்கு மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவுக்கு தொழிலதிபர் சீ.மு.நூ.மு. முஹம்மது யூசுப் தலைமை தாங்குகிறார்.
முத்துப்பேட்டை எம்.ஏ. முஸ்தபா, ஆசியான் கவிஞர் க.து.மு. இக்பால், பிரபல எழுத்தாளர் ஜெ.எம்.சாலி எம்.ஏ., அமீர் சாஹிப், நஜ்முத்தீன், மு.அ.மசூது ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத் தலைவரும், புதிய நிலா இதழ் சிறப்பாசிரியருமான மு. ஜஹாங்கீர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
ஊடக வல்லுநரும், ஆய்வாளருமான எம். முஹம்மது அலி ஊற்றுக்கண்ணின் சிதறல்கள் குறித்தும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பனார் வெப்ப மூச்சுக்கள் ஓர் ஆய்வு எனும் தலைப்பிலும் நூல் அறிமுகவுரை நிகழ்த்துகின்றனர்.
மலேசியா நாணயமாற்று வணிகர் சங்க தலைவர் எம்.ஒய். முஹம்மது சுஐபு, பன்னூலாசிரியர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழக தலைவர் மு. ஹரிகிருஷ்ணன் நூலை வெளியிட முதல் பிரதியினை மஸ்ஜித் பென்கூலன் நிர்வாகக்குழு தலைவர் எஸ்.எம். ஜலீல் பெறுகிறார்.
நூலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஏற்புரை நிகழ்த்துகிறார். நிகழ்ச்சியினை சங்கம் எம். இலியாஸ் நெறிப்படுத்துகிறார்.
நூலாசிரியர் தொடர்புக்கு : [email protected]
Wassalam
Dr.Himanasyed
+6592717237