பேராசிரியர் ஆனந்தகுமாருக்கு சாகித்ய அகாடமி விருது!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: காந்தி கிராமப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பா.ஆனந்தகுமாருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் பா.ஆனந்தகுமார்.
இவர் மலையாளம், தெலுங்கு, ரஷ்ய மொழிகளிலும் புலமை பெற்றவர். ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு ஆகியதுறைகளில் 20 நூல்களையும், 62 கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
இயந்திரம் (மூல ஆசிரியர் மலையாற்றூர் இராமகிருஷ்ணன்) என்ற மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்து 2008-ம் ஆண்டிற்கான சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதை ஆனந்தகுமார் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications