சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி
டெல்லி சங்கீத் நாடக அகடெமி செயலாளர் ஜெயந்த் கஸ்துவார் இதைத் துவக்கி வைத்தார். அண்ணாமலை பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்கள் பரத நாட்டியம் ஆடி முதல் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.
5 நாட்கள் நடக்கும் இந்த நாட்டியாஞ்சலி விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
நேற்று சென்னை சைல சுதா நடனப் பள்ளி மாணவர்களின் குச்சிப்புடி, பெங்களூர் நாட்டியப் பிரியா நடனப்பள்ளி மாணவர்களின் நாட்டிய நாடகம் மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த மாயா உள்ளிட்டவர்களின் பரதநாட்டியம் இடம் பெற்றது.
கோவை அபிராமி நாட்டியாலயா மாணவர்கள் புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடம் மாணவ, மாணவியர், அரியலூர் அகிலன் மாணவ, மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
நிகழ்ச்சிகளைக் காண ஏராளமான பொது மக்களும் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.