For Daily Alerts
Just In
பாகவதர் இல்லத்தை அரசுடைமையாக்க கோரிக்கை
புதுக்கோட்டை: எம்.கே. தியாகராஜபாகவதர் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று தமிழ்மாநில விஸ்வகர்மா ஒர்க்கர்ஸ் யூனியன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையில் தமிழ்மாநில விஸ்வகர்மா ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜானகிராமன் மற்றும் பலர் பேசினர்.
ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜபாகவதர் பெயரில் அரசு விருதுகள் வழங்கி வுரவித்து வருவது வரவேற்கதக்கது.
அதே போன்று திருச்சியில் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜபாகவதர் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
Comments
Story first published: Thursday, February 26, 2009, 10:43 [IST]