துபாயில் மாபெரும் ரத்ததான முகாம்
துபாய்: துபாயில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
துபாயில், ஜமாஅத்துத் தவ்ஹித் மற்றும் அல் வாசல் மருத்துவமணை இனைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தின.
மார்க்கப் பணிகளுடன் சமுகப்பணிகளையும் கடல் கடந்தும் நம் ஜமாஅத் செய்து வருவதன் ஓர் அம்சமாக துபையில் கடந்த 27.02.2009 வெள்ளியன்று துபை அல் வாசல் மருத்துவணை வளாகத்தில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.
ஜேடி மருத்துவ அணி செயலாளர் சகோ. சாதிக் அலி ஒருங்கினைப்பில் ஜேடி தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் காலை 8 மணியளவில் துவங்கியது.
கடல் கடந்து வாழ்ந்தாலும், கிடைக்கும் சொற்ப விடுமுறை நாளின் ஒரு பகுதியை ஏதேனும் நற்காரியங்களில் பயன்படுத்தி மறுமை நாளின் நன்மையை பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் காலை 8 மணிக்கு நிகழ்ச்சி என்றாலும் சகோதரர்கள் ஆர்வத்துடன் காலை 7.30 மணிக்கே மருத்துசமணையில் குழுமத் தொடங்கினர்.
ஜேடி கிளைகளான டேரா, அல்கோஸ், சோனாப்பூர், ஹோர் அல் அன்ஸ், சத்வா கிளைகள் மட்டுமின்றி அபுதாபி மற்றும் ஷார்ஜா மண்டலங்களிலிருந்தும் ஓரிரு சகோரர்களும், கேரளா, கர்நாடகம் போன்ற பிற மாநிலத்தவர்களும் அல்லாமல் இலங்கையைச் சேர்ந்த சகோதரர்களும் குருதி கொடையளித்தனர்.
100 பேர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருந்தும், 147 சகோதரர்கள் குருதி கொடையளித்தனர். அது மட்டுமல்லாமல் தன்னார்வத்தில் பல சகோதரர்கள் வந்திருந்தும், குறிப்பிட்ட நேரத்தில் முகாமை நிறைவு செய்யும் பொருட்டு, மதியம் 12.15 மணிக்கு நிறைவடைந்நது. கலந்து கொண்ட ஒரு சில சகோதரர்கள் தானம் செய்ய இயலாத நிலையும் நேரமின்மையால் ஏற்பட்டது.
சகோ. அபுதாஹிர் அவர்களின் தலைமையில் தன்னார்வ தொண்டர்கள் சிறந்த முறையில் பணியாற்றினர்.












Click it and Unblock the Notifications