எட்டயபுரத்தில் இன்று உமறுப்புலவரின் 367வது பிறந்தநாள் விழா

எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப்புலவரின் 367வது பிறந்ததின விழா இறையருளால் இன்று மாலை 5.15 மணிக்கு எட்டையபுரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
விழாவுக்கு உமறுப்புலவர் சங்க தலைவர் உ. காஜாமைதீன் தலைமை வகிக்கிறார். எஸ்.எம். அஹமது ஜலால் பைஜி இறைவசனங்களை ஓதுகிறார். எஸ்.பக்கீர் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
தூத்துக்குடி கே.எம்.ஏ. மீரான், எட்டையபுரம் நகர் மன்றத்தலைவர் பி.டி. ராஜேந்திரன், இளசை மணியன், பேராசிரியர் முனைவர் எம். முஹம்மது நாஸர், புளியங்குடி புலவர் மு. கமால்முகைதீன், எஸ். ஹாஜி யூசுப் நபி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கவிக்கோ எம். அப்துல் ரகுமான், பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.பாதுஷா நன்றியுரை நிகழ்த்துகிறார்.












Click it and Unblock the Notifications