கடும் வறட்சி-முதுமலை சரணாலயத்தில் யானைகள் இடமாற்றம் !
Subscribe to Oneindia Tamil

நீலகிரி மாவட்டம், முதுமலை வன சரணாயலத்தில் கடும் வறட்சி நிலவி வருகின்றது. இதனால் வன விலங்குகளுக்கு உணவு, நீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன.
சரணாலயத்திற்கு உடப்பட்டு செயல்பட்டு வரும் தெப்பக்காடு முகாமில் 11 யானைகளும், பாம்பேக்ஸ் பகுதிகளில் கர்ப்பிணி மற்றும் வயது முதிர்ந்த யானைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
தெப்பக்காடு முகாமில் யானைகள் சவாரிக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. வறட்சி காரணமாக யானை சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தெப்பக்காடு முகாமில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நெல்லிக்கரை ஆற்றங்கரைக்கு அருகில் 8 யானைகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications