For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்க் கருத்தரங்கம்

By Sridhar L
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ் உயராய்வு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியும் இலக்கியப் பேச்சாளருமான கோ.பாலச்சந்திரன் என்றும் தமிழ் எனும் தலைப்பில் பேசினார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்மொழிப் புலத்தின் இக்கால மொழியியல் துறையின் முன்னாள் தலைவர் சு.வேங்கடராமன், தமிழில் சமய இலக்கியங்கள் எனும் தலைப்பில் பேசினார்.

தேவாரம், திருவாசகம், திருப்பாவை போன்றவற்றில் அமைந்துள்ள பக்திச்சுவை பற்றியும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பக்தி இலக்கியத்துக்கு ஆற்றியப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

யாதவர் கல்லூரி வணிகவியல் துறை உயராய்வு மையத் தலைவர் க.அழகுசுந்தரம் காலத்தின் தேவை எனும் பொருளில் பேசினார்.

ஆங்கிலத்தில் மாணவர்கள் பேச வேண்டிய அவசியம், தொடர்ந்து படிக்கும் பழக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை, மனிதநேயம், தன்னம்பிக்கை, முயற்சி ஆகியவற்றின் தேவை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

மாணவி இரா.ஜெயசித்ரா, வள்ளுவர் கண்ட அரசியல் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் உயராய்வு மையத் தலைவர் வீ.மோகன் வரவேற்றார். மாணவர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X