துபாய் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் கருத்தரங்கு
Subscribe to Oneindia Tamil
துபாய் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் 'கல்வியும் கவிதையும்' எனும் தலைப்பில் கருத்தரங்கு அஸ்கான் டி பிளாக்கில் சனிக்கிழமை ( 28 மார்ச் 2009 ) மாலை எட்டு மணியளவில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், எம்.ஐ.இ.டி. கலைக்கல்லூரியின் முதல்வருமான முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.
அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை தலைவர் கவிஞர் எம். அப்துல் கத்தீம்,செயலாளர் அசன்பசர், திருச்சி ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்த உள்ளனர்.
நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரம் பெற : 050 45 47 046 / 050 5489609 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications