முறுக்கு மீசை வைத்ததற்காக டிஸ்மிஸ் செய்தது சரியே: சுப்ரீம் கோர்ட்

வீரத்திற்கு அடையாளமாக கூறுவார்கள் மீசையை. ஆனால் ஆசை ஆசையாய் முறுக்கு மீசை வளர்த்த ஒருவர் அந்த மீசையால் வேலையை இழந்து விட்டு நிற்கிறார். மீசையால் வேலை பறிக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து விட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் ஜோய்நாத் விக்டர் டி. கடந்த 2000மாவது ஆண்டு இவர் முறுக்கு மீசை வைத்திருந்ததற்காக பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 55 வயது.
மீசையை சுருக்கிக் கொள்ளுமாறு பலமுறை அவருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டும் அதை ஜோய்நாத் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜோய்நாத். அங்கு இவரது மனு டிஸ்மிஸ் ஆகி விட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார் ஜோய்நாத். அந்த மனுவில், எனது இஷ்டப்படி மீசை வளர்க்க எனக்கு உரிமை உண்டு. எனது குடும்பத்தில் எல்லோருமே இப்படித்தான் முறுக்கு மீசை வைத்துள்ளனர்.
எனவே எனது மீசைக்காக பணியிலிருந்து நீக்கியது செல்லாது என உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் ரவீந்திரன் ஆகியோர் கொண்ட் பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் அவர்கள் அளித்த தீர்ப்பில், மீசை வளர்ப்பது உங்களது குடும்பப் பழக்கம் என்கிறீர்கள். அப்படியானால் அதை குடும்பத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலையில் சேர்ந்தால் அந்த நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்து ஜோய்நாத்தின் மனுவை டிஸ்மிஸ் செய்து விட்டனர்.
விமான நிறுவன சட்டம் 1937ன் விதிமுறைகளின் கீழ், விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், சுத்தமாக ஷேவ் செய்த முகத்துடன்தான் பணியில் இருக்க வேண்டும். சீக்கியர்களுக்கு இதில் விலக்கு உண்டு. மீசை வைத்துக் கொள்வதாக இருந்தால் மேலுதட்டுக்கு கீழே கொஞ்சம் கூட முடி வளர விடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
Indian Railway: ரயில்வேயில் 2,801 பணியிடங்கள்.. 10, ஐடிஐ தகுதி தான்! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்! -
RRB ALP: ரயில் டிரைவர் ஆகணுமா? வந்தாச்சு உதவி லோகோ பைலட் அறிவிப்பு! 11,127 பணியிடங்கள்.. பட்டைய கிளப்புங்க -
Federal Bank: ஃபெடரல் வங்கியில் வேலை பார்க்க ஆசையா? டிகிரி முடித்திருந்தால் போதும்.. செம சான்ஸ்! விட்றாதீங்க -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி!












Click it and Unblock the Notifications