முறுக்கு மீசை வைத்ததற்காக டிஸ்மிஸ் செய்தது சரியே: சுப்ரீம் கோர்ட்

வீரத்திற்கு அடையாளமாக கூறுவார்கள் மீசையை. ஆனால் ஆசை ஆசையாய் முறுக்கு மீசை வளர்த்த ஒருவர் அந்த மீசையால் வேலையை இழந்து விட்டு நிற்கிறார். மீசையால் வேலை பறிக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து விட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் ஜோய்நாத் விக்டர் டி. கடந்த 2000மாவது ஆண்டு இவர் முறுக்கு மீசை வைத்திருந்ததற்காக பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 55 வயது.
மீசையை சுருக்கிக் கொள்ளுமாறு பலமுறை அவருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டும் அதை ஜோய்நாத் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜோய்நாத். அங்கு இவரது மனு டிஸ்மிஸ் ஆகி விட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார் ஜோய்நாத். அந்த மனுவில், எனது இஷ்டப்படி மீசை வளர்க்க எனக்கு உரிமை உண்டு. எனது குடும்பத்தில் எல்லோருமே இப்படித்தான் முறுக்கு மீசை வைத்துள்ளனர்.
எனவே எனது மீசைக்காக பணியிலிருந்து நீக்கியது செல்லாது என உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் ரவீந்திரன் ஆகியோர் கொண்ட் பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் அவர்கள் அளித்த தீர்ப்பில், மீசை வளர்ப்பது உங்களது குடும்பப் பழக்கம் என்கிறீர்கள். அப்படியானால் அதை குடும்பத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலையில் சேர்ந்தால் அந்த நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்து ஜோய்நாத்தின் மனுவை டிஸ்மிஸ் செய்து விட்டனர்.
விமான நிறுவன சட்டம் 1937ன் விதிமுறைகளின் கீழ், விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், சுத்தமாக ஷேவ் செய்த முகத்துடன்தான் பணியில் இருக்க வேண்டும். சீக்கியர்களுக்கு இதில் விலக்கு உண்டு. மீசை வைத்துக் கொள்வதாக இருந்தால் மேலுதட்டுக்கு கீழே கொஞ்சம் கூட முடி வளர விடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications