துபாய்: என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கருத்தரங்கம்
துபாய்: வி. களத்தூர் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை நடத்தும் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பிலான கருத்தரங்கம் துபாயில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் நூர் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கை:
அமீரகத்தில் வாழும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மேற்க்கொண்டு என்ன படிக்க வைக்கலாம் என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.
பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், எதிர்கால சமுதாயத்தினருக்கு வழிகாட்டுவதற்காகவும் வரும் 24ம் தேதி மாலை 6 மணியளவில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கருத்தரங்கம் துபை தேராவிலுள்ள லாஸ்ட் ஹவர் ரெஸ்டாரன்ட் (டொலாரக்ஸ் ஜவுளிக்கடை பின்புறம்) மாடியில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு ஈ.டி.ஏ அஸ்கான் டிசைன் மேனேஜரும் கல்வி மேம்பாட்டுக்குழு தலைவருமான ஷேக் முஹம்மது தலைமை தாங்குகிறார்.
கலந்தாய்வு நிபுணர்களான சையது ஜாபர் (அய்மான் கல்லூரி செயலாளர், திருச்சி) மற்றும் முஹைதீன் பிச்சை (மக்கள் தொடர்பு மேனேஜர், ஈ.டி.ஏ அஸ்கான் - துபை) ஆகியோர் பங்கேற்று பெற்றோர்களுக்கு ஆலோசனை கூற இருக்கிறார்கள்.
முஹம்மது அலி (தகவல் தொடர்பு தலைவர்) நன்றியுறை ஆற்றுகிறார்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் நபர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நூர் முஹம்மது (050 - 8404171 ),
ஷேக் முஹம்மது (050 - 7640240),
முஹம்மது அலி (050 - 8797254),
சவுக்கத் அலி (050 - 8566975)
இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்திலும் பெற்றோர்- மாணவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications