கனடாவில் தமிழர்கள் பெரும் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
டொரோன்டோவில் அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக வீதி மறியல்: 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
கனடா நாட்டின் டொரோன்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன் கடந்த வியாழக்கிழமை தமிழர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முதல் சாலை மறியலாக மாறியது.
நகரின் முக்கிய சாலையான யூனிவர்சிட்டி அவெனியூவில் (University Avenue) 10,000க்கும் அதிகமான மக்கள் திரண்டதால் போக்குவரத்து முடக்கப்பட்டது.
நாளை ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசின் படுகொலைகள் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதால் 28, 29 ஆம் நாட்களில் போராட்டத்தில் மிகப் பெருமளவில் தமிழ்மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல அமெரிக்க தூதரகங்களை மையப்படுத்தி மாண்டிரியல், ஒட்டாவா, கல்கெரி போன்ற கனடாவின் பெரு நகரங்களிலும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.













Click it and Unblock the Notifications