கலிபோர்னியாவில் சிவசங்கர் பாபா உரை

லட்சுமி கணபதி கோவிலில் உள்ள வைதீக வித்யா கணபதி மையத்தில் இந்த உரை நடந்தது.
தனது பேச்சின்போது, கடவுள் நம்பிக்கை கொண்ட அனைத்துத் தரப்பினரும், அனைத்து மதத்தினரும், அவர்கள் சமூகத்தின் எந்தத் தளத்தில் இருந்தாலும் கடவுள் மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும்.
தற்போது கடவுளைப் பற்றி நினைக்க இந்த வேகமான உலகில் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. முன்பெல்லாம் கோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் போவோரின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. ஆனால் இப்போது அது குறைந்து விட்டது.
எனவே நாம் நமது வேலைகளில் கவனத்துடன் இருப்போம். அதேசமயம், நமது சிந்தனைகளை இறைவனின் பாதக் கமலத்தில் விட்டு வைப்போம். இதுதான் இன்றைய நெருக்கடிகளைத் தீர்க்க நம் முன் உள்ள ஒரே வழி என்றார்.
பாபாவின் உரையைக் கேட்க பெருமளவிலான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். சான்ஜோஸ் பே ஏரியா பகுதியைச் சேர்ந்த பிரவீனா ஸ்ரீவத்சன் இந்த சத்சங் உரைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பாபா தற்போது 2 மாத கால உலக சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். ஏற்கனவே இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் பயணத்தை முடித்து விட்டார்.
இத்தகவலை பள்ளியின் தாளாளர் எஸ்.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications