தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 20% அதிகரிப்பு

சென்னையில் 25 'சுற்றுலா நட்பு' ஆட்டாக்களை துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையவில்லை.
இந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது தமிழகம் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊட்டி போன்ற கோடை வாசஸ்தலங்கில் மக்கள் தங்குவதற்கு விடுதிகள் கிடைக்காத அளவுக்கு கூட்டமி நிரம்பி வழிந்துள்ளது.
இதையடுத்து கூட்டம் அதிகம வரும் இடங்கள் ஆராயப்பட்டு அங்கு புதிய விடுதிகள் கட்டப்படும். தமிழக சுற்றுலா துறையின் தங்கும் விடுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலா நட்பு ஆட்டோ...
வெளிநாட்டு, பிற மாநில் சுற்றுலா பயணிகளிடம் நட்பு முறையில் பழகி, அவர்களுக்கு சரியான, நியாயமான கட்டணத்தில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று காட்டுவதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்டடுள்ளது.
இந்த சுற்றுலா நட்பு ஆட்டோக்களில் தமிழகத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்கள் இருக்கும். இந்த திட்டத்தின்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் சுற்றுலா நட்பு ஆட்டோக்கள் இயக்கப்படும்.
முதல் கட்டமாக சென்னையில் 63 ஆட்டோக்கள், குற்றாலத்தில் 28 ஆட்டோக்கள், கன்னியாகுமரியில் 18 ஆட்டோக்கள், மதுரையில் 7 ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை தஞ்சாவூர், திருச்சி, கடலூர் மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
புதுச்சேரியில் பாராசூட் செய்லிங்...
இந்நிலையில் தமிழக சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் கூறுகையில், புதுச்சேரியில் முதலியார்குப்பம் பகுதியில் கயிறுகளை படகில் கட்டி கொண்டு கடல் மேலே பாராசூ்டடில் பறக்கும் பாராசூட் செய்லிங் அறிமுகப்படுத்த இருக்கிறது.
முதுமலையில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ரூ. 4 கோடி செலவில் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுற்றுலா துறையை மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றார் இறையன்பு.












Click it and Unblock the Notifications