குற்றாலத்தில் காணாமல் போன சாரல்!
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலத்தில் சாரல் மழை நின்றுபோனதால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது.
குற்றாலத்தில் கடந்த நான்கு தினங்களாக சாரல் வெளுத்து வாங்கியது. இதனால் சீசன் களை கட்டியது. நேற்று முன்தினம் சிறப்பான சாரலும், மிதமான வெயிலும் மாறி மாறி காணப்பட்டதால் சீசன் நன்றாக இருந்தது. ஆனால் நேற்று பகல் முழுவதும் சாரல் மழை பெய்யவில்லை.
லேசான வெயில் காணப்பட்டது. பலத்த காற்று வீசியது.
சாரல் பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்தது. ஐந்தருவியில் மட்டும் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. மெயினருவில் ஒரளவு தண்ணீர் விழுகிறது.
புலியருவியில் உள்ள மூன்று பிரிவுகளில் இரண்டு பிரிவுகளில் மட்டும் தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்தில் ஒரளவே தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் சுமாராக உள்ளது.












Click it and Unblock the Notifications