துபாய்-விடுமுறையில் தாயகம் செல்கிறீரா?
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் பணிபுரிந்து வருவோர் கோடை விடுமுறையில் பலர் அவரவரது தாயகத்திற்கு செல்வது வழக்கம். இத்தகைய சூழ்நிலையினைப் பயன்படுத்தி அந்த வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டுவதும் வழக்கமாகிவிட்டது.
இதையடுத்து துபாய் காவல்துறை ஒரு ஏற்பாட்டினைச் செய்துள்ளது. அதன்படி நெடுநாட்கள் வெளியூர் செல்வோர் காவல்துறையிடம் தெரிவித்துவிட்டுப் போகலாம்.
இந்த வீடுகளை காவல் துறையில் தொடர்ந்து கண்காணித்து வரும்.
இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications