சென்னை, பெங்களூர், டெல்லியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி
சென்னை: ஓரினச் சேர்க்கைக்கு தடை விதிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டப் பிரிவை நீக்கக் கோரி சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் நேற்று ஓரினச் சேர்க்கையாளர்கள் பிரமாண்ட பேரணிகளை நடத்தினர். சென்னை மெரீனா கடற்கரையில் இந்தப் பேரணி நடந்தது. டெல்லியிலும் பேரணி நடந்தது.
தமிழகத்தில் நடந்த முதல் ஓரினச் சேர்க்கையாளர் பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆனால் போகப் போக கூட்டம் அதிகரித்தது.
சென்னை நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
பெங்ளூரில் தேசிய கல்லூரி மைதானத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள், அரவாணிகள், கூடினர். பல்வேறு வெளிநாட்டவர்களும் இதில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து பேரணி தொடங்கியது.
சென்னையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பேரணியில் பங்கேற்றவர்கள் நடந்து சென்றனர். இப்படிக்கு ரோஸ் புகழ் ரோஸ், அரவாணி கல்கி உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
பரதநாட்டியக் கலைஞரும், சக்தி மையத்தின் உறுப்பினருமான அனிருத்தன் வாசுதேவன் கூறுகையில், சென்னை பழமைவாத நகராக கருதப்படுகிறது. இருப்பினும் இன்று கூடிய கூட்டத்தைப் பார்த்தால் புதுமையான எண்ணங்களைக் கொண்ட நகரம் என்பதை சென்னை நிரூபித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications