கைம்பெண்களை பாதுகாக்க தனி சட்டம்-பெண்கள் மாநாட்டில் கோரிக்கை
நாகை: கணவனை இழந்த பெண்களை பாதுகாக்க தனி சட்டம் இயற்றக் கோரியும், கைம்பெண்களுக்கு என அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று வஞ்சிக்கப்பட்ட பெண்கள் வாழ்வுரிமை இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
விதவைகள் மற்றும் கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் அகில உலக விதவை பெண்கள் தின விழா மாநாடு நாகையில் உள்ள டிபிஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கணவனை இழந்த பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் அழைக்கும் கொடுமையை தடுக்க வன்கொடுமை சட்டத்தை உருவாக்கி விதவை பெண்களை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, விதவை பெண்களுக்கு என அரசு தனி நலவாரியத்தை ஏற்படுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்குவது, விதவை திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை மணக்க முன்வரும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், இறந்த கணவனின் இறுதி சடங்குகளில் தாலி அறுப்பது போன்ற மதச்சடங்குகளை புறக்கணிக்க விரும்பும் விதவைகளை நிர்பந்திக்க கூடாது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications