சிகாகோ Vs சென்னை!

சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள், அதன் ஆதரவாளர்கள் கூடி பேரணிகள் நடத்தினர்.
ஓரினச் சேர்க்கைக்கு தடை விதிக்கும் மத்திய அரசின் 377வது சட்டப் பிரிவை நீக்கக் கோரியும், ஓரினச் சேர்க்கையாளர்களின் சம உரிமையை வலியுறுத்தும் வகையிலும் இந்தப் பேரணி நடைபெற்றது.
இதேபோன்ற பேரணி சிகாகோவில் கடந்த ஆண்டு நடந்தது. அப்போது 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் அதில் பங்கேற்றனர். ஆனால் சென்னையில் நடந்த பேரணியில் ஆயிரத்திற்கும் சற்று மேற்பட்டோரே கலந்து கொண்டனர்.
சென்னையில் நடந்த பேரணி கிட்டத்தட்ட ஒரு எதிர்ப்புப் பேரணி போலவே இருந்தது. ஆனால் சிகாகோவி்ல் மாபெரும் விழாவைப் போல அது இருந்தது. பான்டு வாத்தியம் முழங்க நடந்த அந்த அணிவகுப்பு பிரமாண்டமாக இருந்தது.
சென்னையில் நடந்த பேரணியில் சமூகத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சிகாகோவில், அரசியல் வாதிகள், உள்ளூர் தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.
சென்னை பேரணியில் அரவாணிகள், சமூக சேவகர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
சிகாகோ பேரணிக்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு திருமணமும் செய்த கொண்ட இரு ஆண்கள் தலைமை தாங்கினர்.
சிகாகோ பேரணியின்போது ஓரினச் சேர்க்கைக்கு எதிரான கருத்துக் கொண்டவர்கள் அதுகுறித்த பதாகைகளை ஏந்தி நின்று எதிர்ப்புகளைக் காட்டினர்.
சிகாகோவுடன் ஒப்பிடுகையில், சென்னை பேரணி பிரமாண்டமானதாக இல்லை. இருப்பினும் எதிர்காலத்தில் சிகாகோவை சென்னை மிஞ்சலாம் என்கிறார்கள்..
கலி காலம்!.












Click it and Unblock the Notifications