ஓய்வு நாளில் டிஐஜியாகி ஐஜியான எஸ்.பி.!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வு பெறும் நாளன்று டிஐஜி மற்றும் ஐஜி ஆகிய இரு பதவி உயர்வுகளோடு ஓய்வு பெற்றுள்ளார் எஸ்.பி. ஒருவர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமராஜன். 60 வயதாகும் இவர் கடந்த 1990ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக உயர்த்தப்பட்டார்.

அதிரடிப்படை எஸ்.பியாக பணியாற்றி வந்த இவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவருக்கு டிஐஜி மற்றும் ஐஜி ஆகிய இரு பதவி உயர்வுகளும் ஒரே நாளில் கிடைத்தது.

இதையடுத்து நேற்று காலை இந்த பதவி உயர்வுகளை ஏற்று கையெழுத்திட்டு பணியில் சேர்ந்த ராமராஜன், மாலையில் ஐஜியாக பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஒரே நாளில், அதிலும் ஓய்வு நாளின்போது டிஐஜி, ஐஜி என இரு பதவி உயர்வுகளைப் பெற்ற முதல் அதிகாரி இவராகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+