காரைக்குடியில் தமுஎச சார்பில் இலக்கியக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கியக் கூட்டம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு எழுத்தாளர் ஜீவசிந்தன் தலைமை வகித்தார். ழுத்தாளர் நெல்சன் ஜீவா வரவேற்றார்.
விஸ. காண்டேகர் எழுதிய "க்ரவுஞவதம்' எனும் நாவல் பற்றி பேராசிரியர் சி. மாதவன் மதிப்புரையாற்றினார்.
எழுத்தாளர் ஆர். கந்தசாமி ஜூன் மாதத்திய ஆனந்த விகடன் சிறுகதைகள் பற்றி மதிப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து கலந்துரையாடலில் பேராசிரியை ஆவுடையம்மாள் தயாளன், கவிஞர் ஆ. பழநி, கவிஞர் ஜனநேசன் ஆகியோர் பங்கேற்றனர். மு. சொக்கலிங்கம் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications