இன்று கரும்புலிகள் தினம் - இலங்கையில் உஷார்!

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமல்லாமல், உலகத்தில் உள்ள போராளிகள் இயக்கங்களுக்கு எல்லாம் மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் கரும்புலிகள் பிரிவு.
உலகின் முதல் தற்கொலைப் படை என்ற பெயர் இந்த பிரிவுக்கு உண்டு.
1987ம் ஆண்டு யாழ்ப்பாணம், நெல்லியடியில் ஜூலை 5ம் தேதியன்று கேப்டன் மில்லர் என்ற புலிகள் அமைப்பின் முதல் கரும்புலி வீரர் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினார். உலகின் முதல் மனித வெடிகுண்டு என்ற பெயரும் மில்லருக்குக் கிடைத்தது.
அதேபோல கரும்புலிகள் இயக்கத்தின் முதல் பெண் மனித வெடிகுண்டு அங்கயற்கண்ணி.
அன்று தொடங் கரும்புலிகள் படையினர் நடத்திய தொடர் தாக்குதல்களில், கடந்த 22 வருடங்களில், 700 கரும்புலி வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பல நூறு பேரின் உயிரைப் பறித்துள்ளனர்.
புலிகள் இயக்கம் இன்று முடங்கிப் போயுள்ள நிலையில் கரும்புலிகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு இணையதளங்களில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வார்த்தைகளுடன் கூடிய அஞ்சலி செய்திகள் காணப்படுகின்றன.
புலிகள் இயக்கம் இல்லாவிட்டாலும் கூட ஆங்காங்கு சிலர் பதுங்கியிருக்கலாம் என்ற அச்சத்தால் தலைநகர் கொழும்பில் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications