கோவையில் மழை வேண்டி 101 தவில் இசை
கோவை: உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் வரும் ஜூலை 19 ம் தேதி அன்று 101 பேர் தவில் இசைக்கும் நிகழ்ச்சி நடக்க கோவையில் நடக்க இருப்பதாக பிரபல தவில் வித்வான் வலையபட்டி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நாடு முழுவதும் மழை பொழிய வேண்டும். அப்போது தான் நாடும், மக்களும் நலமாக இருக்க முடியும். இதற்காகவே இதுவரை இந்த 101 தவில் இசை நிகழ்ச்சியை கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்றேன்.
மதுரை, சென்னை, திருப்பதி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை உட்பட பல இடங்களில் நடந்த 101 தவில் இசை கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதே போன்று வரும் ஜூலை 19ம் தேதி கோவையில் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் திருச்சிற்றம்பலம் அரங்கில், பகல் 2.30 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில், தமிழகம், திருப்பதி, பெங்களூரு, விஜயவாடா, நெல்லூர், தெனாலி, பாலக்காடு, கொச்சின் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரபல தவில் வித்வான்கள் 101 பேர் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications