குழந்தை தொழிலாளர் ஒழிப்பு-செங்கோட்டைக்கு விருது

Subscribe to Oneindia Tamil

Nellai collector Jeyaraman presents child labor abolition award to Senkottai Municipal Chairman Raheem
செங்கோட்டை: குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்ட சிறந்த நகராட்சியாக செங்கோட்டை தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு கேடயம் வழங்கி பாராட்டியுள்ளது.

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றமாகும். வறுமையின் காரணமாக வேலைக்கு செல்லும் குழந்தைகளை மீட்டு அவர்களை சிறப்பு பள்ளியில் சேர்த்து மீண்டும் முறை சார்ந்த பள்ளியில் சேர்ப்பதற்காக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையில் நல்ல ஈடுபாடு கொண்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தமிழக அரசு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்து வருகிறது.

அதன்படி செங்கோட்டை நகராட்சியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையில் அதிக அக்கறையுடன் செயல்பட்ட தலைவர் ரகீமுக்கு கலெக்டர் மு.ஜெயராமன் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் செங்கோட்டை நகராட்சி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் சிறந்ததாக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+