80 வயது மனைவியிடம் விவாகரத்து கோரும் 89

Subscribe to Oneindia Tamil

சென்னை: 60 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்து வைக்க வேண்டும். 80 வயது மனைவியிடமிருந்து விவாகரத்து அளிக்க வேண்டும் என்று கோரி 89 வயது தாத்தா தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை குடும்ப கோர்ட்டில் தள்ளி வைக்கப்பட்டது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அந்த 89 வயது முதியவர், தனது 80 மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப கோர்ட்டில் மனு செய்துள்ளார்.

அதில், எனக்கும் எனது மனைவிக்கும் 1949-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 60 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் பிறந்தன.

மகன்கள் தொடங்கிய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இப்போது எனது மகன்களோடு சேர்ந்து கொண்டு எனது மனைவி என்னை துன்புறுத்துகிறாள். மேலும் என்னை ஒதுக்கி வைத்து விட்டார். ஆகவே எனது மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு சென்னை 2-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை ஆகஸ்டு 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+