For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

Sabarimala Temple
சபரிமலை: ஆடி மாத பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

கோவில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி நடையைத் திறந்து நெய் விளக்கை ஏற்றி வைத்தார். இதையடுத்து இருமுடி கட்டிவந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து, தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயப்பனின் தவக் கோலத்தைக் களைந்து அபிஷேகம் செய்து, ஆடி மாத பூஜைகளை நடத்த சுவாமியிடம் அனுமதி கேட்கும் சடங்குகளை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டது.

மீண்டும் இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஐயப்பனுக்கு ஆடி மாத பூஜைகள் நடத்தப்படும். வரும் 21ம் தேதி வரை இந்தப் பூஜைகள் நடக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X