சங்கரன்கோவிலில் ஆடிதபசு விழா ஜூலை 25ல் துவக்கம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் ஆடி தபசு திருவிழா வருகிற 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஆகஸ்ட் 4ம் தேதியன்று ஆடிதபசு திருவிழா நடைபெறுகிறது.
25ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் கோமதியம்மாள் சன்னதி முன்பாக அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது.
அன்று முதல் தினமும் மாலையில கோயிலில் இருந்து அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதி உலாவும், மாலையில் கோயிலில் இருந்து அம்பாள் தவக்கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி சமுதாய மண்டகப்படி கட்டிடங்களுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் 9வது நாளான அடுத்த மாதம் 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 4ம் தேதி முக்கிய விழாவான தவக்கோலத்தில் இருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்கசாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடிதபசு விழா நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் ராஜசேகர், அறங்காவலர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.