நெல்லை மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் 2400 குளங்கள்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: போதிய மழை இல்லாததால், நெல்லை மாவட்டத்தில் சுமார் 2400 குளங்கள் வறண்டு கிடக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் இந்த பருவ மழை காலத்தில் இதுவரை சுமார் 275 மி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக சராசரி 134 மி மீ மழை பெய்யும்.
நெல்லை மாவட்டத்தில் கால்வாய், நீர்வரத்து குளங்கள், மானாவாரி குளங்கள் 2449 உள்ளன. இதில் 53 குளங்களில் மட்டுமே விவசாயிகள் ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்தும் அளவில் தண்ணீர் உள்ளது.
போதிய மழையின்மையால் மீதமுள்ள 2396 குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே இந்த குளங்களை நம்பியுள்ளவர்கள் உள்பட நெல்லை மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications