கழுதை மீது ஏறி வந்த சுயேச்சை வேட்பாளர்!
Subscribe to Oneindia Tamil
கம்பம்: கம்பம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கழுதை மீது ஏறி வந்தவர், மூன்று நிமிடம் தாமதமானதால் மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார்.
தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாவட்டப் பொதுச் செயலாளராக இருப்வர் சேகர்ஜீ (44). இவர் கம்பம் தொகுதியில் மனு தாக்கல் செய்ய உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு கழுதையில் அமர்ந்து வந்தார்.
ஆனால், தேர்தல் அலுவலர் மனு தாக்கல் நேரம் முடிந்துவிட்டது என்று கூறினார். இதையயடுத்து, தான் ஏறி வந்த கழுதையை வேனில் ஏற்றி அனுப்பி விட்டு இவர் பைக்கில் வீடு திரும்பினார்.
கழுதை மேல் ஏறி வந்து மனு தாக்கல் செய்ய வந்த இவரை பார்க்க வழி நெடுகிலும் கும்பல் திரண்டது.
நேறறு முன் தினம் தொண்டாமுத்தூரில் மனு தாக்கல் செய்ய வந்த ஒரு வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications