சிவசங்கரி-மேத்தா-பழ.கருப்பையாவுக்கு கம்பன் கழக விருதுகள்

Subscribe to Oneindia Tamil

Sivashankari
சென்னை: சென்னை கம்பன் கழகத்தின் 35ம் ஆண்டு விழாவையொட்டி எழுத்தாளர் சிவசங்கரி, கவிஞர் மு.மேத்தா, எழுத்தாளர் பழ.கருப்பையாவுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை கம்பன் கழகத்தின் 35ம் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பர் விருது' மற்றும் ரூ.25,000 ரொக்கப் பரிசு இலங்கை இ.ஜெயராஜுக்கு வழங்கப்படுகிறது.

பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசில் மற்றும் ரூ.20,000 ரொக்கம் எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்படுகிறது.

நீதியரசர் மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசில் மற்றும் ரூ.10,000 ரொக்கம் கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கப்படுகிறது.

பேராசிரியர் அ.ச.ஞா.குடும்பத்தினர் நிறுவியுள்ள சிறந்த நூலுக்கான இந்த ஆண்டு அ.ச.ஞா. விருது பழ.கருப்பையாவுக்கு வழங்கப்படுகிறது.

கம்பன் அடிப்பொடி சா.கணேசனார் விருது இந்த ஆண்டு மாணவன் பா.ஜெகனுக்கு வழங்கப்படுகிறது.

பேராசிரியர் சாலமன் பாப்பையா பட்டிமன்றக் குழு பரிசு மாணவி மு.ரம்யாவுக்கு வழங்கப்படுகிறது.

கி.வா.ஜ. நினைவுப் பரிசில் வழக்கறிஞர் தேனிரா பாண்டியன், கம்பன் அடிப்பொடி நினைவுப் பரிசில் பேராசிரியர் பூவண்ணன், ராதாகிருஷ்ணன் நினைவுப் பரிசில் இதழாளர் பி.எல்.ராஜேந்திரன், மர்ரே எஸ்.ராஜம் நினைவுப் பரிசில் பதிப்பாளர் அரிமா மெ.செல்லப்பன், க.கு.கோதண்ட ராமன் நினைவுப் பரிசில் கவிஞர் வேலூர் நாராயணன், சீறாப்புராணம் பரிசில் முனைவர் மு.சாயபு மரைக்காயர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆழ்வார்கள் ஆய்வு மைய விருதினை வழங்குகிறார். நீதிபதி சொக்கலிங்கம் விழாவுக்கு தலைமை ஏற்று மற்ற விருதுகளை வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+