திகில் ஏற்படுத்திய தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா - கரூரில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

Breaking cocounts on head held in Karur temple fest
கரூர்: கரூர் அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா இன்று நடைபெற்றது.

கருர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் கிருஷ்ணதேவராயர் மன்னன் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.

இந்த கோவிலுக்கு கருர், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை, ஈரோடு, சென்னை மற்றும் பெங்களூர், மைசூர், ஹைதராபாத் போன்ற ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் தேதி முதல் விரதம் இருந்து, 19 ம் தேதியான இன்று தங்களது தலையை மொட்டையடித்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை முடிப்பது வழக்கம்.

அதன்படி இன்று தலையில் தேங்காய் உடைக்கும் விழா நடந்தது. கடந்த வருடம், சிறுவர்கள் தலையில் தேங்காய் உடைத்தால் மூளை பாதிக்கும் என சிலர் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தனர். அதனால் சிறுவர்களுக்கு மட்டும் தலையில் தேங்காய் உடைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+