மதுரையில் 'ஹிரோஷிமா'-புகைப்படக் கண்காட்சி
மதுரை காந்தி மியூசியத்தில், ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை துவங்கியது.
கண்காட்சி துவக்க நிகழ்ச்சிக்கு, காந்தி மியூசிய துணைத் தலைவர் எம். மாரியப்பன் தலைமை வகித்தார். மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சிகள் இயக்குநர் சுந்தரஆவுடையப்பன் தலைமை துவக்கிவைத்து கண்காட்சியைத் துவக்கிவைத்தார். மியூசிய ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இக்கண்காட்சியில் 70 அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சி 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பிரிவு 1-ல் அணுகுண்டு வெடிப்புக்கு முன் இருந்த ஹிரோஷிமா, பிரிவு 2-ல் அணுகுண்டு வெடிப்பிற்கான முன்னேற்பாடுகள், பிரிவு 3-ல் உருக்குலைந்த ஹிரோஷிமா, பிரிவு 4-ல் ஹிரோஷிமாவின் மீட்டுருவாக்கம், பிரிவு 5-ல் அமைதியை நோக்கிய பயணம், பிரிவு 6-ல் அணுகுண்டு, அணு யுத்தம் பற்றி மகாத்மா காந்தியின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
இக்கண்காட்சி வரும் 10ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த புகைப்படக் கண்காட்சியைக் காண அனுமதி இலவசம்.