சுதந்திர தினம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு-அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் இருக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட 32 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவை தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திறந்து வைக்கின்றனர்.
நாளை 62வது சுதந்திர தின விழா நடக்கிறது. இதையொட்டி சென்னையில் உள்ள 32 கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு, வழிபாட்டை துவக்கி வைக்கின்றனர். அதன் விபரம்:
1. கபாலீஸ்வரர் திருக்கோவில், மயிலாப்பூர்- சபாநாயகர் ஆவடையப்பன்
2. கங்காதீஸ்வரர் ஆலயம், புரசைவாக்கம் - மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி
3. அனந்த பத்மநாபசுவாமி கோவில், அடையார் - போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு
4. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் - சுகாதார துறை அமைசச்ர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
5. மகாலட்சுமி திருக்கோவில், பெசன்ட் நகர் - சுற்றுலா துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன்.
6. காரணீஸ்வரர் திருக்கோவில், சைதாப்பேட்டை - வருவாய் துறை அமைச்சர் இ.பெரியசாமி
7. வடபழனி ஆண்டவர் திருக்கோவில், வடபழனி - இந்து அறநிலைய துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
8. முண்டகக் கண்ணியம்மன் கோவில், மயிலாப்பூர் - ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி
9. குறுங்காளீஸ்வரர் கோவில், கோயம்பேடு - சமுதாய நலத்துறை அமைச்சர் பூங்கோதை
10. மாதவப் பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர் - சென்னை மேயர் மா. சுப்பிரமணியன்
இதை தவிர்த்து வில்லிவாக்கம், சௌமிய தாமோதிர பெருமாள் கோவிலை ரங்கநாதன் எம்எல்ஏவும், மேற்கு தாம்பரத்தில் உள்ள செல்வவிநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோவிலில் வழிபாட்டை எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏவும் துவக்கி வைக்கின்றனர்.
அண்ணாநகர் அருள்மிகு திருமேனியம்மன் கோவில் திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவல்லிக் கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில், தேனாம்பேட்டை அருள்மிகு பாலசுப்பிரமணியசாமி கோவில், நுங்கம்பாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட 32 ஆலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications