சிறந்த தமிழ் சாப்ட்வேருக்கு ரூ. 1 லட்சம் பரிசு-அரசு அறிவிப்பு

சிறந்த தமிழ் மென்பொருள் நிறுவனங்களுக்கு கணியன் பூங்குன்றனார் பெயரில் வழங்கப்படும் பரிசுக்குரிய விண்ணப்ப தேதி செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் கணினி யுகத்தில் அதற்கேற்ப தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வருடமும், தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தெரிவு செய்து அதனை உருவாக்கியவருக்குக் கணியன் பூங்குன்றனார் பெயரில் பரிசுத் தொகையாக ரூ.1,00,000 மும், அந்த நிறுவனத்திற்குப் பாராட்டு சான்றிதழையும் தமிழக அரசு வழங்கி வருகின்றது.
2009 - 10 ம் ஆண்டிற்கான பரிசுக்குரிய விண்ணப்பங்கள் 14.8.2009-க்குள் வந்து சேர வேண்டு என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இதற்கு 15.9.2009 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதில், தமிழ் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட மென் பொருளாக இருத்தல் வேண்டும். மென்பொருள் கடந்த மூன்றாண்டுக் காலத்திற்குள் (2006, 2007, 2008) தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், மென்பொருள் தனி ஒருவராலோ, கூட்டு முயற்சியாலோ, நிறுவனத்தாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூட்டு முயற்சி என்றால் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள, பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
இந்த தொகை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நேரிடையாக பணமாகவும் செலுத்தலாம். அல்லது கேட்பு வரைவோலையாக - The Director of Tamil Development (I/C), Chennai - என்ற பெயரில் அனுப்பி வைக்கலாம்.
விதி முறைகள் அடங்கிய விண்ணப்பங்கள் வரும் 15.9. 2009 - ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் தகவல் அறிய, தமிழ் வளர்ச்சி இயக்குநர் (பொ), தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரியில் கடிதம் மூலமும் , 044-28190412, 28190413 என்ற தொலை பேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications