நல்ல நேரம்- 5 மணி நேரத்தில் நடந்த 196 கல்யாணங்கள்
குருவாயூர்: புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஞாயிற்றுக்கிழமை 5 மணி நேரத்தில் 196 கல்யாணங்கள் நடத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே கோவிலில் கடந்த 149 கல்யாணங்கள் நடந்ததே முந்தைய சாதனையாக இருந்து வந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ரதீசன் கூறுகையில், இது ஒரு புதிய சாதனையாகும்.
மலையாள காலண்டர்படி, இன்று (நேற்று) மிகவும் நல்ல நாளாகும். எனவே இன்றைய நாளில் திருமணங்கள் செய்யவே அனேகரும் விரும்பினர். இதனால்தான் அதிக அளவிலான திருமணங்கள் நடந்துள்ளன.
மொத்தம் 392 குடும்பங்களைச் சேர்ந்தவ ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டதால் கோவிலில் நிற்கவே இடம் இல்லாத நிலை ஏற்பட்டது.
மொத்தம் ஐந்து மணி நேரத்திற்குள் 196 கல்யாணங்களும் நடத்தி முடிக்கப்பட்டது.
2 மணவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலைத் தவிப்பதற்காக அங்கு மணமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு கல்யாணத்திற்கும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தக் கல்யாணங்களை சற்று தொலைவில் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் பகுதியிலிருந்து குடும்பத்தினரும், உறவினர்களும் பார்த்து மகிழ்ந்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications