சேலம், ஈரோடு, நெல்லையில் யுஎஸ் தூதரகம் சார்பில் நிகழ்ச்சிகள்
ஈரோடு: இந்திய-அமெரிக்க நட்புறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க தூதரகம் நெல்லை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.
பாளையங்கோட்டையில் வரும் 14, 15ம் தேதியில் அமெரிக்க தூதரகம் சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தூதரக அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்திய-அமெரிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க தூதரகம் நெல்லை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நெல்லையில் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
14ம் தேதி பாளை சேவியர் கல்லூரியில் 'ஜனநாயகம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடக்கிறது. இந்த போட்டியை நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் துவக்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா பரிசுகள் வழங்குகிறார்.
அமெரிக்க ஊடக திட்ட இயக்குனர் லாரன் கொலிட்டா அமெரிக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
மதியம் 2 மணி அளவில் ஐக்கிய நாடுகளில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து டில்லி அமெரிக்க மையத்தின் கலாச்சார உறவுகள் அலுவலர் நிக் நம்பா பேசுகிறார்.
பின்னர் ஐக்கிய நாடுகள் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த வாசுதேவன் சீனிவாச்சாரியர், நேரு கல்வி உதவி திட்ட உதவிகள் குறித்து கல்லூரி பேராசிரியர்களுக்கு விளக்குகிறார்.